சர்வஜன அதிகாரத்தின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமானது

சர்வஜன அதிகாரத்தின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமானது

பொதுத் தேர்தலுக்கான சர்வஜன அதிகாரத்தின் தேர்தல் பிரச்சாரம் அனுராதபுரத்தில் இன்று (19.10) ஆரம்பமானது.

பிரச்சாரம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலி மஹா சேயாவிற்கு விஜயம் மேற்கொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் கடுமையாக உழைக்கிறோம் என கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கலகெடிஹேன பிரதேசத்தில் நேற்று (18.10) நடைபெற்ற சர்வஜன அதிகாரத்தின் கம்பஹா மாவட்ட பிரிவு தலைவர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

தங்களிடம் உள்ள பணத்தை செலவழிக்கும் அரசியலை செய்வதாக கூறிய அவர் யாரிடமும் பணம் பறிக்கும் அரசியலை செய்யவில்லை என்றார்.

மேலும் இதுவொரு பொன்னான வாய்ப்பு எனவும் இந்த முறை முடிவுகள் ஆச்சரியமாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version