பெண்கள், சிறுவர்களின்உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சட்டம் வகுக்கப்பட வேண்டும் – சஜித்

பெண்கள், சிறுவர்களின்உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சட்டம் வகுக்கப்பட வேண்டும் - சஜித்

சிறுவர், பெண்களின் உரிமைகள் வலுவாக பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் உரிமைகள் அடிப்படை உரிமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்மலானை தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் இரத்மலானையில் இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“எமது நாட்டில் இந்த துரதிஷ்டவசமான, சூழ்நிலையில் குழந்தைகள், சிசுக்கள், தாய்மார்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் நாளுக்கு நாள் மீறப்படுவதைக் காணமுடிகிறது.

தாய்மார்கள் மற்றும் பெண்களின் போசாக்கின்மை, சிசுக்களின் போசாக்கின்மை மற்றும் குழந்தைகளின் போசாக்கின்மை வளர்ச்சி ஆகியவை ஆரோக்கியமான தலைமுறை உருவாக்கத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஈஸ்டர் தாக்குதல், கொரோனா கோவிட் மற்றும் வங்குரோத்து ஆகிய மூன்று பாதிப்புகள் கடுமையான பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இதனால், குழந்தைகள், சிசுக்கள், தாய்மார்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர், பெண்களின் உரிமைகள் கூட தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன. வீட்டில், வீதியில், வேலை செய்யும் இடங்களில் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

அதேபோன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியின் பின்னர் பொருளாதார, சமூக, கலாச்சார, மத, அரசியல் உரிமைகள் மனித உரிமைகள் அடிப்படை உரிமைகளாக வலுப்படுத்தி புதிய சட்ட வகுப்பாக்கத்துக்குச் செல்வோம்” என அவர் உறுதியளித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version