யானை வெளி அமைக்கும் பணிகள் தீவிரம்

யானை வெளி அமைக்கும் பணிகள் தீவிரம்

நாடளாவிய ரீதியில் வனப்பாதுகாப்பு எல்லைகளை வரையறுத்து யானை வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகள் 80 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை 5,500 கிலோமீட்டர் உள்ளடங்கும் வகையில் யானை வேலி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 1500 கிலோமீட்டருக்கான யானை வேலியை அமைக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

யானை வேலி அமைக்கும் பணிகள் நிறைவடைந்தவுடன் அவற்றைப் பராமரிப்பதற்காக சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தவுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் யானை வேலிகளை அமைத்துள்ளவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply