ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு அறிக்கை: பொலிஸ்க்கு அறிவிக்கவுள்ள தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு அறிக்கை: பொலிஸ்க்கு அறிவிக்கவுள்ள தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையினை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான சட்ட நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொள்வார்கள் எனத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவு தொடர்பான அறிக்கைகளைக் கையளிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த 13ம் திகதி நிறைவடைந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 வேட்பாளர்கள் உரிய அறிக்கைகளை வழங்கியிருந்தனர்.

பத்தரமுல்ல சீலரத்ன தேரர், சுயேச்சை வேட்பாளர் சரத் கீர்த்திரத்ன மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் வருமானம் மற்றும் செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

Social Share

Leave a Reply