ஒருநாள் தொடர்: முதல் போட்டி இலங்கை வசம்

ஒருநாள் தொடர்: முதல் போட்டி இலங்கை வசம்

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

பல்லேகல மைதானத்தில் இன்று(20.10) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, மேற்கிந்தியத் தீவுகள் 38.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களைப் பெற்றிருந்த மழை குறுக்கிட்டது.

இதன் காரணமாகப் போட்டி 37 ஒவர்களுக்கு மட்டுப்படுத்தப் பட்டத்துடன், DLS முறைப்படி இலங்கை அணிக்கு 232 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 31.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இதன்படி, இலங்கை 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற ரீதியில் முன்னிலையில் உள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version