50க்கு மேற்பட்ட துப்பாக்கிகளே மீள கையளிக்கப்பட்டுள்ளன – பாதுகாப்பு அமைச்சு

50க்கு மேற்பட்ட துப்பாக்கிகளே மீள கையளிக்கப்பட்டுள்ளன - பாதுகாப்பு அமைச்சு

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைத் தற்காலிகமாக ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இதுவரை 50க்கு மேற்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இருப்பினும், பல்வேறு காரணங்களுக்காகப் பாதுகாப்பு அமைச்சினால் சுமார் 1,650 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.

மீளாய்வு நடவடிக்கையின் பின்னர் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகள் மீண்டும் கையளிக்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் திருப்பித் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து/பயிர் பாதுகாப்பு அல்லது விளையாட்டு நடவடிக்கைகளுக்காகத் துப்பாக்கிகளைப் பெற்றுக்கொண்ட உரிமையாளர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது எனவும் பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

துப்பாக்கிகள், வெடிபொருட்களை மீள ஒப்படைக்காதவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version