02 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் காயம்

02 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 28 பேர் காயம்

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (22.10) பிற்பகல்
இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டிய சூரியவெவ நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

Social Share

Leave a Reply