வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம்

வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம்

வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் இணைந்து விசேட வேலைத்திட்டம்

வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய இலங்கை பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் இராணுவ நிலைமையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அனைவரது பொறுப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் தமது பாதுகாப்பு தொடர்பில் இன்று முதல், 1997 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அறிவிக்கலாம்.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறை ஊழியர்களை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version