வாக்காளர் அட்டைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாக்காளர் அட்டைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்களைத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி மற்றும் நவம்பர் 03 ஆகிய தினங்களில் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்கள் எனத் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (23.10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 26ம் திகதி தபால் நிலையத்திற்கு வழங்கப்படும் எனவும் பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்காளர் அட்டைகள் வழங்கும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்டச் செயலகங்களில் இன்று(23.10) நடைபெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version