மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் இரண்டாவதும் போட்டியிலும் இலங்கை வெற்றியீட்டி, தொடரை கைப்பற்றியது.

பல்லேகல மைதானத்தில் இன்று(20.10) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

போட்டியின் ஆரம்பத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாகப் போட்டி 44 ஒவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதன்படி, மேற்கிந்தியத் தீவுகள் 36 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 38.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இதன்படி, இலங்கை 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version