மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆறுதல் வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆறுதல் வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் மூன்றாவதும், இறுதியுமான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியீட்டியது.

பல்லேகல மைதானத்தில் இன்று(26.10) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

போட்டியின் இடை நடுவே மழை குறுக்கிட்டதன் காரணமாகப் போட்டி 23 ஒவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 23 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதன்படி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு DLS முறைப்படி 195 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 22 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இருப்பினும், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற ரீதியில் இலங்கை கைப்பற்றியது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version