அம்பலாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் பலி

அம்பலாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் - இருவர் பலி

காலி , அம்பலாங்கொடை – உரவத்த பிரதேசத்தில் அடையாளந்தெரியாதவர்களால் இன்று (10.11) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில்
பெண் ஒருவர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவரால் துப்பாக்கி பிரயோகம்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பலாங்கொடை – குளிகொட பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவியே துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version