கிழக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட D,M.L பண்டாரநாயக்க தமது கடமைகளை இன்று (07/12) பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் சமயத்தலைவர்கள் முன்னிலையில் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர் இதற்கு முன்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்தார்.
(திருகோணமலை நிருபர்)
