வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பலர் மாயம் – மீட்பு பணிகள் தீவிரம்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பலர் மாயம் - மீட்பு பணிகள் தீவிரம்

அம்பாறை – காரைதீவு – மாவடிபள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உழவு வண்டி ஒன்று நேற்று (26.11) அடித்து செல்லப்பட்டமையைத் தொடர்ந்து காணாமற் போயுள்ள 6 சிறுவர்கள் உட்பட 8 பேரையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

இந்த உழவு வண்டியில் 11 சிறுவர்கள் பயணித்துள்ளனர். அவர்களில் ஐவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 12 மற்றும் 16 வயதுக்கு இடைப்பட்ட அறுவர் காணாமற் போயுள்ளனர்.

நிந்தவூர் பகுதியில் உள்ள மதரசா பாடசாலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிய மாணவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தநிலையில் கடற்படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version