‘நீதிக்கான போராட்டத்தில் நிலைத்திருப்பதே ஒரே வழி’ – சஜித்

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் பிள்ளைகளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ சந்தித்தார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த சஜித், பிரியந்தவின் பிள்ளைகளை சந்திப்பது ஒரு பாக்கியம் என்றும் அவர்களின் சிறிய தோள்களில் தாங்க முடியாத துயரத்தை உலகம் குவித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் அவர்களுக்கு வலிமையை வழங்குவதற்கான ஒரே வழி நீதிக்கான போராட்டத்தில் நிலைத்திருப்பதுதான் என்றும் கூறினார்.

‘நீதிக்கான போராட்டத்தில் நிலைத்திருப்பதே ஒரே வழி' - சஜித்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version