தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு

தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு

எவ்வித அச்சமும் சந்தேகமும் இன்றி நத்தார் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் கலந்து கொள்ளுமாறு கொழும்பு பேராயர்களுக்கான மக்கள் தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த கிறிஸ்த்தவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த மத ஸ்தலங்களிலும் தேவாலயங்களிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (24.11) கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இதனைக் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version