எலிக்காய்ச்சல் காரணமாக மேலும் 02 உயிரிழப்புகள் பதிவு

எலிக்காய்ச்சல் காரணமாக மேலும் 02 உயிரிழப்புகள் பதிவு

எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (04.01)நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

உயிரிழந்த இருவரில் ஒருவர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் மற்றுமொருவர் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் எலி காய்ச்சல் காரணமாக இதுவரை எட்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை தற்போது வைத்தியசாலைகளில் எலிக்காய்ச்சலுக்காக 10 பேர் சிகிச்சை பெற்று வருவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version