டயனா கமகேவுக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெறப்பட்டது

டயனா கமகேவுக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெறப்பட்டது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு
பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

டயனா கமகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையானதைத் தொடர்ந்து, பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.

டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான
வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (06.02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதியான டயானகமகே நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய நிலையில் , கொழும்பு தலைமை நீதவான்
தனுஜா லக்மாலி, அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று (06.02) பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply