சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் மாதமொன்றில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
இதுவென என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
2018 ஜனவரி மாதத்தில் 238,924 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத்திருந்தனர்.
இந்த வருடத்தில் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்தியாவிலிருந்து 43,375 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
மேலும் ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் பெரும்பாலான சுற்றுலாப்
பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.