இன்றைய வாநிலை..!

இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதிகாலை நேரங்களில் நாட்டின் பல பகுதிகளில் குளிரான வானிலை நிலவும் என்றும், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version