துப்பாக்கி பிரயோகத்தில் கனேமுல்ல சஞ்சீவ பலி

துப்பாக்கி பிரயோகத்தில் கனேமுல்ல சஞ்சீவ பலி

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்தில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் சட்டத்தரணியின் தோற்றத்தில் வருகைதந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version