கொழும்பு கிரேன்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு துப்பாக்கிதாரிகள் லொறி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.