கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகலகம்வீதிய பகுதியில் கடந்த 17 ஆம் திகதி உந்துருளியில் சென்ற இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்திற்கு உதவிய குற்றத்திற்காக இராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் ஒருவர் கடந்த 18 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபரின் மனைவியும் நேற்று (20.03) கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொட்டுவில, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version