நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுடன் தொடர்புடைய வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் நாளை வரை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹீர் மற்றும் கே.பி.பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று (01.04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக, கொழும்பு மாநகர சபை சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால், இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version