முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சாமர சமபத் தசநாயக்க குறித்து தான் தெரிவித்த கருத்து தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகத்தயார் என தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்ததற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.