மாவிட்டபுரம் மகா கும்பாபிஷேகத்தில் பிரதமர் பங்கேற்பு

51 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (11.04) காலை பங்கேற்றார்.

ஸ்கந்த குமாரரின் பாதம் பட்டதாக நம்பப்படும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாண மக்களின் பெருமையை பிரதிபலிக்கும் ஒரு ஆலயமாகும்.

மத மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நாடு என்ற வகையில், மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கான இத்தகைய சிறப்புமிக்க இடங்களை எந்தவித அடக்குமுறையும் இல்லாமல் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும் என்றும், அதே நேரத்தில் வளமான மற்றும் ஒன்றுபட்ட நாட்டில் மத மற்றும் கலாச்சார சுதந்திரத்தை உறுதி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும் என்றும், வடக்கு மற்றும் தெற்கின் கலாச்சார மைய அமைப்புகளை சமமாகப் பாதுகாக்கும் பொறுப்பை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் இராஜராஜ ஸ்ரீ இரத்னசபாபதி குருக்கள், மஹாராஜராஜ ஸ்ரீ ஞானஸ்கந்த குருக்கள், தரிசன சிவசும கலாநிதி வைத்தியசு குருக்கள் உள்ளிட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு குருக்கள் மஹா கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு பிரதமருக்கு ஆசி வழங்கினார்கள்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version