யாழில் வாகன விபத்து – ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் வடக்கு சந்திக்கு அருகில் நேற்று (12.04) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டியிலிருந்து வருகைத்தந்த தனது மகளை அழைத்துவருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலாலியைச் சேர்ந்த 62 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version