அனுராதபுரம் – பாதெனிய பகுதியில் மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெத்தபஹுவ பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளனதில் இருவர் உயிரிழந்துள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் வெலிவேரிய, கொச்சிவத்தை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய கணவனும் 53 வயதுடைய அவரது மனைவியுமே உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.