அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2025ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (21.04) ஆரம்பமானது.
இதற்கமைய, முதலாம் தவணைக்கான கல்விச் செயற்பாடுகள் மே மாதம் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
2025 இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் மீண்டும் மே மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஒகஸ்ட் 7ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்டமாக பாடசாலைகள் ஒகஸ்ட் 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதோடு, அதன் கல்விச் செயற்பாடுகள் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் நவம்பர் 17ஆம் திகதி முதல் டிசம்பர் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.