நூறிற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்வடைந்துள்ளதாக
சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக வைத்திசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல், இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 1,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் 14,600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.

அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இருந்தே பதிவாகியிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version