மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – தமிழ்நாட்டின் நாகபட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் நேற்று (18.06) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
மோசமான வானிலை காரணமாக கடந்த 13ம் திகதி முதல் பயணிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அக்டோபர் 2023 முதல், சுபம் நிறுவனத்திற்குச் சொந்தமான சிவகங்கை கப்பல், சனிக்கிழமை தவிர்த்து வாரத்தின் ஏனைய அனைத்து நாட்களும் இயங்கி வருகிறது.