துமிந்த திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் ஜூலை மாதம் 7ம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (26.06) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் விசாரணைகளுக்காகவே அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Social Share

Leave a Reply