உப்பு குறித்து புதிய தீர்மானம்!

நுகர்வோர் அதிகார சபையுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சந்தையில் உப்பின் விலையைக் குறைக்கவும் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அண்மைய நாட்களில் இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதையடுத்து, போதுமான அளவு உப்பு கையிருப்பு உள்ளதால், இறக்குமதி செய்யப்பட்ட மேசை உப்பை வழங்குவது உடனடியாகத் ஆரம்பிக்கப்பட்டு சங்கம் தெரிவிக்கிறது.

1 கிலோ கல் உப்பு ரூ. 180

1 கிலோ தூள் உப்பு தூள் ரூ. 240

400 கிராம் தூள் உப்பு ரூ. 120

மேற்கண்ட விலையில் பொதி செய்யப்பட்ட உப்பு நாடு முழுவதும் விநியோகிக்கப்படுவதற்கு சில நாட்கள் செல்லும் எனவும், அதன் பிறகு உற்பத்தியாளர்களால் பொதி செய்யப்பட்ட உப்பை குறித்த விலைகளில் நுகர்வோருக்கு வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply