பிலிப்பைன்ஸ் நாட்டில் நில நடுக்கம்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டு நேரப்படி இன்று (28.06) காலை 7.07 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டாவோ ஆக்ஸிடென்டல் மாகாணத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் 101 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன்
சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை அந்நாட்டு ஊடகங்கள் உறுதி செய்துள்ளது.

Social Share

Leave a Reply