கம்பஹாவில் ஒரே இரவில் 300 பேர் கைது

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று நடாத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்ககைளில் 300 இற்கும் அதிமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை (STF), இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை (SLAF) மற்றும் இலங்கை கடற்படை ஆகியன இணைந்து நடத்திய பாரிய அளவிலான திடீர் தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு நேற்று (04.07) இரவு முழுவதும் இந்த நடவடிக்கை தொடர்ந்ததாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வழக்கமான சோதனை நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, அந்த பகுதிகளில் சிறப்பு வாகன சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெறிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version