மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர் நிலை காரணமாக அடுத்த சில வாரங்கள் இலங்கைக்கு முக்கியமான காலமாக இருக்கலாம் என்று பாதுகாப்பு துணை அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (06.02) பாராளுமன்றத்தில் பேசுகையில், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அத்தியாவசிய சேவைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.
இதனால் நாட்டின் அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்காக அவசரநிலையை மேலும் நீட்டிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.