அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போரின் முதல் நாளில் உயிரிழந்த அலி கமேனி அவர்களின் இரண்டாவது மகனான மொஜ்தபா காமெனி ஈரானின் புதிய உச்சத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
56 வயதான அவர் மீது Assembly of Experts என்ற 88 உறுப்பினர்கள் கொண்ட மத அறிஞர்கள் சபை தீர்மான வாக்கெடுப்பின் மூலம் இந்த பதவியை வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.
இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத மொஜ்தபா காமெனெய், Islamic Revolutionary Guard Corps உடன் நெருங்கிய தொடர்புகளை கொண்ட செல்வாக்கு மிக்க நபராக அறியப்படுகிறார்.