இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் இன்று (15/12) வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவருடன் தூதரக அதிகாரிகளும் பயணித்த நிலையில், யாழ்ப்பாணம் – பருத்தித்துறைமுனைப் பகுதியை அவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கான பயணமாகவே அவர்கள் அங்கு சென்றிருப்பதாக யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
