கொழும்பை வந்தடைந்த மேலுமொரு கப்பல்

இரண்டாயிரம் மெட்ரிக் டொன்னுக்கும் அதிக எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவின் தரத்தை பரிசோதிப்பதற்காக மாதிரிகள் பெறப்பட்டு, அவற்றை பரிசோதிப்பதற்காக இரு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, மர்கெப்டன் என்ற இரசாயன பதார்த்தம் உரிய தரத்தில் காணப்படாமையால், மற்றமொரு கப்பலில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்காதிருப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நேற்று (15/12) நடவடிக்கை எடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

கொழும்பை வந்தடைந்த மேலுமொரு கப்பல்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version