சிறைக்கூடத்துக்குள் உயிரிழந்த நபர்

ஹுங்கம பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூடத்திற்குள் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ இதனை தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் சட்டவிரோத மதுபாவனை தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் நேற்று (18/12) கைது செய்யப்பட்டு, ஹுங்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது அவர் திடீரென சுகயீனமுற்று கீழே விழுந்த நிலையில், ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சிறைக்கூடத்துக்குள் உயிரிழந்த நபர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version