லொறி – டிப்பர் விபத்தில் ஒருவர் பலி

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி 96ஆம் கட்டை பாலத்தில் சீமந்து ஏற்றிச்சென்ற லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (27/12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து சீமெந்து ஏற்றி சென்ற லொறியும் கந்தளாயில் இருந்து வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இதில் சீமந்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(திருகோணமலை நிருபர்)

லொறி - டிப்பர் விபத்தில் ஒருவர் பலி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version