போலி நாணயத்தாள்கள் புலக்கத்தில்

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு சந்தேகத்திற்குரிய நாணயத்தாள் கிடைக்கப்பெறுமாயின், பாதுகாப்பு அடையாளத்தை ஆராய்ந்து, அதனை தம்வசம் வைத்துக் கொள்ளுமாறும், இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், குறித்த போலி நாணயத்தாளை வழங்கிய நபர், அவரது வெளி தோற்றம், அவர் வருகை தந்திருந்த வாகனம், நாணயத்தாளின் பெறுமதி, அதன் தொடர் இலக்கம் ஆகியவற்றை குறித்து வைத்துக்கொண்டு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் போலி நாணயம் தொடர்பான பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 0112422176 மற்றும் 0112326670 இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலி நாணயத்தாள்கள் புலக்கத்தில்

Social Share

Leave a Reply