விரிவுரைகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி 50 சதவீத மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று (29/12) முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்றிரவு (28/12) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே, கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான நடைமுறைகளை முன்னெடுக்குமாறு துணை வேந்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

விரிவுரைகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version