‘விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு’ – ஜனாதிபதி

அரசாங்கத்தின் குறைபாடுகள் குறித்து விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு இருக்கும் அதேவேளை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்களிடமோ அல்லது ஊடகங்களிடமோ மறைக்க வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (27/12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போத அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதே தமது ஒரே நோக்கு என்றபோதும், அதன்போது ஏற்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்ட மக்களுக்கு உரிமை உள்ளது எனத் தெரிவித்தார்.

அத்துடன் தான் ஆட்சிக்கு வரும் போது கொவிட் பெருந்தொற்று ஆரம்பமான நிலையில், அதன் காரணமாக தம்மால் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியாமல் போனதாக அவர் மேலும் தெரிவித்தார்.

'விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு' – ஜனாதிபதி

Social Share

Leave a Reply