இயந்திர பாகம் உடைந்து விழுந்ததில் நபர் பலி

மத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெட்டன்வெவ பிரதேசத்தில் கற்குவாரியில் பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் பாகம் ஒன்று உடைந்து விழுந்ததில் ஒருவர் நேற்று (28/12) உயிரிழந்துள்ளார்.

குறித்த இயந்திரத்தின் ஒரு பகுதியை பொருத்தும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுது, அதிலிருந்த இரும்பினாலான உதிரி பாகமொன்று உடைந்து விழுந்ததில் அதற்குள் சிக்குண்டு குறித்த நபர் பலத்த காயங்களுக்குள்ளானார்.

இந்நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இயந்திர பாகம் உடைந்து விழுந்ததில் நபர் பலி

Social Share

Leave a Reply