சீசெல்ஸில் இலங்கையர் கொலை

சீசெல்ஸில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர் சீசெல்ஸின் லடிகு என்ற தீவில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், சில நாட்களாக கடமைக்கு வருகை தராத நிலையில் நிறுவன அதிகாரியொருவர் வீட்டிற்குச் சென்று பார்த்த பொழுது, அவர் கீழே விழுந்து கிடந்ததாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது அவர் தெரிவித்துள்ளார்.

முன்னெடுக்கப்பட்டு வரும் பிரேத பரிசோதனைகளுக்கு அமைய, அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபர், இலங்கையரான 47 வயதுடைய டொன் ஹரீந்திர பொன்னவில எனத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் பாகிஸ்தானிலும் வன்முறை கும்பல் ஒன்றினால் இலங்கையரான பிரியந்த குமார அடித்து தீயிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

சீசெல்ஸில் இலங்கையர் கொலை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version