‘தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை முக்கியமானது’

இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவுள்ள ஆவணம் கைச்சாத்திடப்படும் என்பதில் எந்த விவாதமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி தெரிவித்துள்ளார்.

குறித்த ஆவணம் தொடர்பிலான செயற்பாடுகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் நேற்று (02/01) தெரிவித்தார்.

தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்பதனால் அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் போது அது தொடர்பில் அதிக கரிசனை செலுத்துவதாக தெரிவித்த அவர், வடக்கு – கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

‘தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமை  முக்கியமானது'
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version