இலங்கை வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் அந்நிய செலாவணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை கட்டாயமாக மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கியினால் வர்த்தக வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான தகவல்கள் வெளியாகி வருவதாக தெரிவித்த அவர், இலங்கை வர்த்தக வங்கிகளில் உள்ள வைப்புத் தொகைகளில் 25 சதவீதம் உள்ளூர் நாணயங்களாக மாற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
