நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காப்புறுதி வழங்கும் திட்டத்தை லிட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஒரு மில்லியன் வரை காப்புறுதியை பெற்றுக் கொள்ள முடியும் என்துடன், 1311 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுப்பதன் மூலம் இந்த காப்புறுதியை பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை குறைந்தளவிலான பயனாளர்களே பயன் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.