ஜனவரி 18ஆம் இலங்கை செலுத்த வேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தியதன் பின்னர், அந்நிய செலாவணி குறைவடையும் என பொருளாதார நிபுணர் காலநிதி நிஷாந்த டி மெல் தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கை தரப்படுத்தலில் மேலும் சரிவடையும் நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடன் செலுத்துவதனால் மட்டும் நாட்டின் அந்நிய செலாவணி பிரச்சினை தீர்ந்துவிடாது எனவும் கடனை செலுத்தும் அளவுக்கு அந்நிய செலாவணி குறைவடையும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.